உமா பாரதியின் ரதயாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு
லக்னோ: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் ரத யாத்திரை நடத்த பாஜக தலைவர் உமா பாரதிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதயைடுத்து ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஊழலு குறி்தது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமம், கிராமமாக ரத யாத்திரை செல்ல பாஜக தலைவர் உமா பாரதி முடிவு செய்தார்.
ஆனால் ரத யாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறுகையில், ரத யாத்திரை நடத்த பாஜகவினர் உறுதிச் சான்றிதழோ அல்லது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெறப்படும் சான்றிதழோ சமர்பிக்கவில்லை. இந்த இரண்டில் ஏதாவது ஒரு சான்றிதழை சமர்பித்தால் ரத யாத்திரை நடத்த அனுமதி அளிக்கப்படும். இது குறித்து அந்த கட்சிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications