சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் பேசும் உரிமை மறுக்கப்படுவது நியாயமில்லை- சிபிஎம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் பேசும் உரிமை மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மீதான தடை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
உரிமைக்குழுவின் தலைவர் அவருடைய பரிந்துரையை நான் அவையில் சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னவுடனேயே, அது அவையின் ஆவணமாகி விடுகிறது.
அந்த ஆவணத்தின் மீது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் பேசுவதற்கான, கருத்து தெரிவிப்பதற்கான உரிமை இருக்கிறது. அந்த உரிமை இப்போது மறுக்கப்படுகிறது. இது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல என்பதால், நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications