'அணுக் கதிர்வீச்சுக்கும் புற்று நோய்க்கும் தொடர்பு இல்லை'-டாக்டர் ரங்கராஜன்
திருநெல்வேலி: அணுக் கதிர்வீச்சுக்கும் புற்று நோய்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அணு விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளத்தில் அணு மின் நிலையம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்ற மும்பை டாடா மருத்துவமனை அணுசக்தி மருந்தியல் துறை தலைவர் டாக்டர் ரங்கராஜன் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்களில் 15 ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனையில் 80 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 41 பேர் கதிர்வீச்சு பாதிப்பு உள்ள பகுதியிலும், 39 பேர் கதிர்வீச்சு இல்லாத பகுதியிலும் பணிபுரிந்தவர்கள். புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 சதவீதம் நோயாளிகளுக்கு கதிரியக்கம் மூலம் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேகலாயா, திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் புறறுநோ்ய் பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால் அங்கு அணு மின் நிலையங்கள் எதுவும் இல்லை. புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் புகையிலை பழக்கமும், வயது அதிகரிப்பும்தான். இதனால் தான் 60 சதவீத புற்றுநோய் ஏற்படுகிறது என்றார் அவர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை என்பதை விளக்கும் வகையில் பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்கு அங்கு நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications