For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் கோளாறுகளுடன் பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

By Siva
Google Oneindia Tamil News

சார்லட்: அமெரிக்காவில் எடை குறைவாகவும், உதடு பிளவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் பிறந்த பெண் குழந்தையை அதன் தாய் சித்ரவதைப்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள சார்லட் பகுதியில் உள்ளது கரோலினா மருத்துவமனை. அங்கு நவோமி என்ற 5 மாத குழந்தை பல்வேறு கோளாறுகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறது. அது எடை குறைவாகப் பிறந்ததுடன், மேல் உதடு பிளவு உள்பட பல்வேறு குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறது.

இந்நிலையில் குழந்தையின் உடல்நிலையில் சில நேரம் முன்னேற்றம் ஏற்படுவதும், சில நேரம் மோசமடைவதுமாக இருந்து வந்தது. இதைப் பார்த்து அதற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் காரணம் தெரியாமல் குழம்பினர். அவர்களுக்கு ஏதோ தோன்ற குழந்தையை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட அறைக்கு மாற்றினர்.

அப்போது தான் கேமராவில் பதிவானற்றைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு குளுகோஸ் ஏற்ற நரம்பில் ஊசி பொருத்தப்பட்டுள்ளது. அந்த ஊசி வழியாக அதன் தாய் ஏதோ மருந்தை அவ்வப்போது ஏற்றி வந்துள்ளார். அந்த மருந்தால் தான் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

English summary
A US woman has injected something in the veins of her 5 month old baby Naomi admitted at the Carolina hospital for various ailments including cleft lip. Doctors have found out this after her action was recorded in a CCTV camera.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X