ராமர் கோவிலை கட்டுவோம் என்பதில் தவறில்லை: நிர்மலா சீதாராமன்
சென்னை: உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று எல்.கே. அத்வானி கூறியதில் எந்தத் தவறுமே இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாரமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் ராமர் கோவில் கட்டுவது என்பது முதன்மையான நோக்கம். இதனைத்தான் உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் அத்வானி எழுப்பினார்.
இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தமது மெளனத்தைக் கலைக்க வேண்டும்.
கூடங்குளத்துக்கு ஆதரவு
அணு உலைகள் நாட்டுக்கு அவசியம் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மக்களின் அச்சங்களைப் போக்கி மின் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதனால் மக்களின் அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை வேண்டும்.
மன்மோகனே காரணம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தலையிடாமல் இருந்து வருகிறார். மன்மோகன் தலையிட்டிருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனையாக பூதாகரமாகி இருக்கிறது. இரு மாநில முதல்வர்களுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கப்பூர்வமான தீர்வு காண வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications