For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Fishermen
ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் படகுடன் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 600 விசைப்படகுகள் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு 3 போர் கப்பல்களில் ரோந்துவந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து விரட்டியுள்ளனர்..

மேலும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஜான் பிரிட்டோ , ராபர்ட் , பெட்வின் , மரியகிளாசன் ஆகிய 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பின்னர், மீனவர்களை இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றதாக ராமேசுவரம் திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
4 fishermen from Tamil Nadu have been arrested by the Sri Lankan Navy for allegedly poaching in Lankan territorial waters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X