For Daily Alerts
Just In
இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் கைது
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 600 விசைப்படகுகள் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு 3 போர் கப்பல்களில் ரோந்துவந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து விரட்டியுள்ளனர்..
மேலும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஜான் பிரிட்டோ , ராபர்ட் , பெட்வின் , மரியகிளாசன் ஆகிய 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பின்னர், மீனவர்களை இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றதாக ராமேசுவரம் திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
4 fishermen from Tamil Nadu have been arrested by the Sri Lankan Navy for allegedly poaching in Lankan territorial waters.
Story first published: Friday, February 10, 2012, 12:40 [IST]