+2 தனித்தேர்வர்களுக்கான டிக்கெட் நாளை முதல் வினியோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள +2 தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுபவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

வரும் மார்ச் மாதம் +2 தேர்வு நடைபெற உள்ளது. இதில் லட்சக் கணக்கான பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். மேலும் தனித் தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு நாளை முதல் வரும் 18ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது,

தனித் தேர்வர்களாக விண்ணப்பித்தவர்கள் குறிப்பிட்டுள்ள தேர்விடத்தின் அருகே உள்ள தேர்வு மையத்தில் பெயர் பதிவாகி உள்ளது. அங்கு அவர்கள் ஹால் டிக்கெட்டுகளை நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் கிடைத்தவுடன் அதில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாட விபரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்பதை சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட்டில் உள்ள விபரங்களில் பிழை மற்றும் மாற்றம் இருந்தால் உடனடியாக அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் உள்ள கூடுதல் செயலாளரை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அணுகலாம்.

மேலும் ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் கூடுதல் செயலாளரை அணுகலாம். செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், கண்டிப்பாக அதை மீண்டும் எழுதி எழுத்து தேர்விலும் பங்கேற்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+