மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: புதிய ராம்நாட் கலெக்டர் உறுதி
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக க. நந்தகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிதித் துறை துணை செயலாளராக இருந்த க. நந்தகுமார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அதே போன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த வி. அருண் ராய் நிதித் துறை துணை செயலாளராக கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து க. நந்தகுமார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்டியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராமனிடம் இருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு அறிவித்துள்ள முன்னோடி திட்டங்களின் பயன் பொதுமக்களை அடைய பாடுபடுவேன். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications