3வது வழக்கில் ராவணன் கைது- செங்கோட்டையன் பி.ஏவும் கைதானார்
கோவை ரூ. 1 கோடி மோசடி வழக்கில் ராவணன், அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகம் ஆகியோரை சென்னை போலீஸார் இன்று கைது செய்தனர்.
ராவணன் மீது பாய்ந்துள்ள 3வது வழக்கு இது. அதேசமயம், ஆறுமுகம் 2வது வழக்கில் கைதாகியுள்ளார்.
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த ஒப்பந்ததாரர் ரவிக்குமாரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக சசிகலா உறவினர் ராவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர்.இதன் பிறகு திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்திக்கு மணல் குவாரி உரிமம் வாங்கி தருவதாக அவரிடம் ரூ.1 கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றி மிரட்டியதாக சென்னை போலீசார் ராவணனை கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் ராவணன் உள்ளிட்டோர் மீது மேலும் ஒரு புகார் வந்தது.
வேலூரை சேர்ந்த தொழில் அதிபர் புவனேசன் மணல் குவாரி குத்தகைக்கு எடுக்க அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகத்தை அணுகி உள்ளார். அப்போது அவர் சசிகலாவின் உறவினர் ராவணன் தான் இதை செய்து முடிக்க முடியும் என்று கூறி உள்ளார்.
இதனால் ராவணனை சந்தித்த போது அவர் ரூ.5 கோடி தந்தால் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்து தருவதாக கூறி உள்ளார். இதற்காக முதல் தவணையாக ரூ.2 கோடியை ஆறுமுகத்திடம் புவனேசன் கொடுத்துள்ளார். ஆனாலும் மணல் குவாரி கிடைக்கவில்லை.
பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புவனேசன் புகார் கொடுத்துள்ளார்.
இதை விசாரித்த சென்னை போலீஸார் ராவணனை இன்று கைது செய்தனர். அதேபோல ஆறுமுகமும் கைது செய்யப்பட்டார். தற்போது ராவணன் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications