தேர்தல் பிரசாரத்தின்போது பேப்பரைக் கிழித்தெறிந்து டென்ஷனாக பேசிய ராகுல் காந்தி
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்குத் தருவதாக கூறிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, கையில் இருந்த பேப்பரைக் கிழித்தெறிந்து கோபமாக பேசியதால் பிரசாரக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கோபாவேசமாக பேசினாலும் கூட பொறுமை இழக்காதவர் ராகுல் காந்தி. ஆனால் நேற்று உ.பி. மாநிலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது அவர் கையில் இருந்த பேப்பரைக் கிழித்தெறிந்து டென்ஷனானது காங்கிரஸாரையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
லக்னோவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடிக் கட்சியும் மக்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மட்டுமே தருகின்றன. மின்சாரம் தருவோம், குடிநீர் தருவோம், வேலைவாய்ப்பு தருவோம் என்கிறார்கள். ஆனால் இதெல்லாம் வெற்று வாக்குறுதிகளே, வேலைக்கு ஆகாத வாக்குறுதிகள் என்று கூறிய அவர் கையில் இருந்த பேப்பரை எடுத்து டார் டாராக கிழித்தெறிந்தார்.
பின்னர் அவர் தொடர்ந்து பேசுகையில், நான் ஏன் பேப்பரைக் கிழித்துப் போட்டேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா. அவர்களது வாக்குறுதிகள் எங்கு போக வேண்டும் என்பதைத்தான் இவ்வாறு செய்து காட்டினேன்.
ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்வோர் கர்நாடகத்திலும், உ.பி.யிலும் நடைபெறும் ஊழல்களை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள் என்றார் ராகுல்.












Click it and Unblock the Notifications