படுகொலை செய்த இத்தாலியர்கள் இதுவரை கைது இல்லை: மீனவர்கள் குமுறல்
டெல்லி: இத்தாலியர்களால் இந்திய மீனவர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை எவரையும் கைது செய்யாதது தமிழகம் மற்று கேரள மீனவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தின் கொல்லம் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் உட்பட இரண்டு பேரை அந்த வழியாக சென்ற இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் சுட்டுக் கொன்றனர்.
கடற்கொள்ளையர்கள் என்று நினைத்து சுட்டதாக முதலில் இத்தாலிய கப்பலில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் மீனவர்கள் தங்களை நோக்கிச் சுட்டதாக முரண்பாடான தகவலகளைக் கூறினர்.
கொச்சிக்கு கொண்டுவரப்பட்ட இத்தாலிய கப்பலில் இருந்தோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இருப்பினும் எவரும் இதுவரை கைது செய்யப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தாலிய தூதரை வெளியுறவுத் துறை அமைச்சகம் அழைத்து கண்டித்திருந்த நிலையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் ஆலோசனை நடத்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியர்களைக் காப்பாற்றுவதற்கு அந்நாட்டு தூதரகம் அதிதீவிர முயற்சி எடுத்துள்ளது.
ஆனால் நடுக்கடலில் இலங்கை கடற்படையாலோ அல்லது இத்தாலிய சரக்குக் கப்பலில் செல்வோரோ சுட்டுக் கொன்றால் எவருமே வாய்திறப்பதில்லை என்பதே மீனவர்களின் குமுறல்












Click it and Unblock the Notifications