தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீது கொலை வழக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

கொச்சி: தமிழக மீனவர்களை கடற் கொள்ளையர்கள் என்று நினைத்து சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பல் மாலுமிகள் மீது கொச்சி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில், ஆலப்புழை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேரை கடற் கொள்ளையர்கள் என்று நினைத்து இத்தாலிய கப்பல் மாலுமிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதனால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று நினைத்ததால் தான் அவர்களை சுட்டுக் கொன்றதாக மாலுமிகள் தெரிவித்தனர்.இதையடுத்து கப்பல் மாலுமிகள், ஊழியர்கள் என அனைவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றிய பிறகே கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாலுமிகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பது மிகவும் மோசமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டி குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

இரு நாட்டு உறவும் பாதிக்கப்படாத வகையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மீனவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+