இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் பிப் 27ல் மனு தாக்கல்
நெல்லை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் திங்கட்கிழமையன்று அமைச்சர் அழகிரி தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில் 27ம் தேதி மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலால்துறை உதவி ஆணையரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
இதற்காக நெல்லை வரும் மத்திய அமைச்சர் அழகிரிக்கு வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு கங்கைகொண்டானில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கட்சியினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தேர்தல் அலுவலர் அலுவலத்திற்கு செல்ல 3 வாகனங்கள் மட்டுமே அனுமதியுண்டு. எனவேகட்சி நிர்வாகிகள் காவல்துறை அனுமதித்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி ஓத்துழைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.