தமிழகம் முழுவதும் 30 டி.எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்-டிஜிபி உத்தரவு
சென்னை தமிழகத்தில் 30 டிஎஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநில டிஜிபி பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
அரியலூர் மாவட்டம் அரியலூர் சரக டி.எஸ்.பி. வி.சந்திரசேகரன், காஞ்சீபுரம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டி.எஸ்.பி. பி.சாம்ராஜ், சென்னை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி சிறப்பு காவல் படை பட்டாலியன் டி.எஸ்.பி. கே.சங்கர், வேலூர் சிறப்பு மண்டல குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டி.எஸ்.பி. என்.கோபாலன், காஞ்சீபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல், சென்னை உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஏ.ராஜேந்திரகுமார், கோவை உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. டி.சோமசேகர் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர்.
மதுரை ரெயில்வே டி.எஸ்.பி. ஏ.வினாயகம், சென்னை போலீஸ் நவீன கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
மொத்தம் 30 டிஎஸ்பிக்கள் இதுபோல மாற்றப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் சசிகலா ஆதரவு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் 30 டிஎஸ்பிக்கள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications