சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு, +2 தேர்வுகள் துவங்கின
Subscribe to Oneindia Tamil
சென்னை: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் +2 மாணவ-மாணவியர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான 10ம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையு ஆகிய பகுதிகளை சேர்ந்த 69 லட்சம் +2 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 3,300 பேர் தனித் தேர்வாளர்கள்.
+2 மாணவர்கள் இன்று ஆங்கிலம் முதல் தாள் எழுதுகின்றனர். 10ம் வகுப்புக்கான தேர்வு வரும் 26ம் தேதியும், +2 தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிகின்றன.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ-மாணவியருக்கான +2 தேர்வு வரும் 8ம் தேதி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications