இடைத்தேர்தல்: சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் பொது மற்றும் போலீஸ் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேட்பாளர்களின் செலவுக் கணக்குளை ஆய்வு செய்ய குஜராத்தைச் சேர்ந்த நரசிம்ம ராவ் என்பவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நெல்லையில் முகாமிட்டு வேட்பாளர்களின் செலவுக் கணக்குளை ஆய்வு செய்து வருகிறார்.
பொது பார்வையாளராக உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மறு சீரமைப்பு கமிஷனர் ரமேஷ் குமார் சதான் சூ, போலீஸ் பார்வையாளராக பரோடா டி.ஐ.ஜி. விஜயராஜ்சிங் கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் பொது பார்வையாளர் ரமேஷ் குமார், போலீஸ் பார்வையாளர் கவுதம் ஆகிய இருவரும் ஆய்வு செய்தனர். தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் நடப்பதை ஆய்வு செய்த அவர்கள் பின்னர் மற்ற பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications