திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 97 லட்சம்

அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோவிலில் தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது மாதம் இருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன.
கடந்த 13ம் தேதி எண்ணப்பட்ட போது உண்டியலில் ரூ.60 லட்சத்து 77 ஆயிரத்து 544 கிடைத்தது. இந்நிலையில் இரண்டாவதாக கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.31 லட்சத்து 33 ஆயிரத்து 227ம், கோசாலை உண்டியலில் ரூ. 22 ஆயிரத்து 736ம், அன்னதான உண்டியலில் ரூ.5 லட்சத்து ஆயிரத்து 396ம், மேலகோயில் அன்னதான உண்டியலில் ரூ.3 ஆயிரத்து 58ம், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் ரூ.2 ஆயிரத்து 132ம், ஆக மொத்தம் ரூ.97 லட்சத்து 40 ஆயிரத்து 93 கிடைத்துள்ளது. மேலும் 952 கிராம் தங்கம், 22 கிலோ 371 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் உண்டியல் வருமானம் ரூ.76 லட்சத்து 45 ஆயிரத்து 193ம், தங்கம் 1076கிராமும், வெள்ளி 10 கிலோ 959 கிராமும் கிடைத்தது.
கடந்த ஆண்டை விட இந்த வருடம் காணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications