'ராகுல்ஜிக்கு சீக்கிரம் கல்யாணமாகட்டும் சாமி': காங். தலைவர் யாகம்!
பாட்னா: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு திருமணம் நடப்பதில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து அவர் விரைவில் குடும்பஸ்தனாக வேண்டி அக்கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் யாகம் நடத்தியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு வயது 41 ஆகியும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் கட்ட பிரம்மசாரியாகவே உள்ளார். இது காங்கிரஸார் பலரையும் கவலையடையச் செய்துள்ளது. அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணுதேவ் பிரசாத் யாதவ் என்னும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் நடக்கவும், உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறவும் வேண்டி யாகம் ஒன்றை நடத்தினார்.
இந்த யாகத்தில் யாதவின் கிராமத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி இந்த ஆண்டாவது தங்களை ஏமாற்றாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications