மேட்டூர் அணை பவளவிழா கோபுரத்தை ஜெ. நாளை திறந்து வைக்கிறார்
சென்னை: மேட்டூர் அணை கட்டப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பவளவிழா நினைவு கோபுரத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை வீடியோகான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.
பவளவிழா கோபுரம் அமைப்பதற்காக கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதற்காக ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டது. 75 அடி உயரம் கொண்ட பவளவிழா கோபுரம் கட்டுமான பணி 2011 மார்ச் மாதம் முடிவடைந்தது. அதன் பிறகு சட்டப்பேரவை தேர்தல் வந்ததால் திறப்பு விழாவுக்கான தேதி ஒத்திவைக்கப்பட்டது..
ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றவுடன் இதனை மேலும் அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு பவளவிழா கோபுரம் திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ஜெயலலிதா சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மேட்டூர் அணை பவளவிழா கோபுரத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.












Click it and Unblock the Notifications