மணிப்பூரில் காங்கிரஸ் 'ஹாட்ரிக் வெற்றி'.. பாஜகவுக்கு கோவா 'ஆறுதல் பரிசு'!
டெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் கோவாவில் படுதோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி மணிப்பூரில் தொடர்ந்து 3வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தர்கண்ட், மணிப்பூரில் படுதோல்வியடைந்துள்ள பாஜகவுக்கு கோவா மட்டும் ஆறுதல் பரிசாகக் கிடைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
உத்தர்கண்டில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது.
பஞ்சாபில் ஆளும் சிரோமணி அகாலிதளத்தின் முதுகில் ஏறி பாஜக வெற்றியை சுவைத்துள்ளது.
மணிப்பூரில் காங்கிரஸ் மீண்டும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது அந்தக் கட்சி தொடர்ந்து அமைக்கும் 3வது ஆட்சியாகும். இதன்மூலம் மணிப்பூரில் 'ஹாட்ரிக்' வெற்றியைப் பெற்றுள்ளது காங்கிரஸ்.
ஆனால் காங்கிரஸ் ஆளும் கோவாவில் மக்கள் பாஜகவுக்கு பெரும் வெற்றியைத் தந்துள்ளனர். இதனால் கோவா காங்கிரஸ் கையைவிட்டுப் போய்விட்டது.
இதன்மூலம் கோவாவில் மட்டும் ஆறுதல் பரிசு போல பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications