சங்கரன்கோவில், கோவில்பட்டி பகுதியில் இறைச்சி விலை அதிகரிப்பு!

சங்கரன்கோவில் இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு திரும்பினாலும் கரை வேட்டிகளின் நடமாட்டம், விலை உயர்ந்த கார்களின் அணிவகுப்பு, சாதாரண பெட்டிக்கடை முதல் சாப்பாடு கடை வரை கூட்டம் அலைமோதுகிறது.
அதிமுக தரப்பில் 32 அமைச்சர்கள் உள்பட 42 பொறுப்பாளர்களுக்கு தலா 200 பேர் வீதம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினரும், அதே அளவில் திமுக முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மற்றும் கூட்டணி கட்சியினர் என அவர்களும் சு்மார் 10 ஆயிரம் பேர் என போட்டியிடும் கட்சிகளுக்கு தகுந்தவாறு தொண்டர்கள், விஜபிக்கள் என 25 முதல் 35 ஆயிரம் பேர் வரை சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் வெளி்மாவட்ட கட்சி பிரமுகர்கள் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு தினமும் கடைகளில் தீனி வாங்கி கொடுப்பதற்கு கட்டு படி ஆகாததால் இப்போது ஆங்காங்கே தினமும் அசைவ உணவு சப்ளை நடந்து வருகிறது. இதற்காக தொண்டர்கள் கிராமத்தில் தங்கியிருக்கும் பகுதிலேயே வீடு எடுத்து தங்கி பிரச்சாரம் செய்வதால் அனல் கொப்பளிக்கும் வெயில் தாக்கத்தை போக்கும் பொருட்டு அசைவு உணவுடன் அரசு மதுபானத்திலிருந்து அலுப்பு மருந்து வரை சப்ளை தீவிரமாக நடந்து வருகிறது.
அசைவு உணவிலேயே மீன் மட்டும் காஸ்ட்லி என்பதால் சிக்கன், மாட்டுக்கறி, ஆட்டிறைச்சியோடு கமகமக்கும் உணவு விருந்து தினமும் 12 மணிக்கு வழங்கப்படுகிறது.
அரசியல் கட்சியனருக்கு தினமும் அசைவு விருந்து உபசரிப்பு நடப்பதால் 400 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 500 ரூபாயாகவும், பீப் 1 கிலோ 200 ரூபாயாகவும், கோழி ரூ.140 ஆகவும், விலை உயர்ந்துள்ளது.
கோவில்பட்டி, சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் ஆடு விற்பனை, கோழி விற்பனை, மதுபான விற்பனை அதிகரித்துள்ளது.
வந்தவங்கள்லாம் சீக்கிரமே இடத்தைக் காலி செய்தால் லோக்கல் ஆட்களுக்கு மட்டன், சிக்கன் விலை குறையும் போல...!












Click it and Unblock the Notifications