பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என பயந்து முஸ்லீம்கள் முலாயமுக்கு வாக்களித்துவிட்டனர்- மாயாவதி
லக்னெள: பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயந்து முஸ்லீம்கள் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் பதவி விலகிச் செல்லும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.
தேர்தல் தோல்வியையடுத்து மாயாவதி இன்று ஆளுநர் பி.எல்.ஜோஷியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
நான் ஆட்சிக்கு வரும்போது உத்தரப் பிரதேசம் மிக மோசமான நிலையில் இருந்தது. மாநிலத்தில் பல மாற்றங்களை முன்னேற்றங்களை கொண்டு வந்தேன். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயந்து முஸ்லீம்கள் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர்.
இதனால் தான் நாங்கள் தோற்று, முலாயம் சிங் வென்றுவிட்டார். மேலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாகக் கூறி அரசியல் செய்து காங்கிரசும் குழப்பம் செய்துவிட்டது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெல்வோம். ஆட்சிக்கு வந்துள்ள சமாஜ்வாடி கட்சியின் மட்டமான நிர்வாகத்தால் மக்கள் நிச்சயம் வெறுப்படைவார்கள், எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்.












Click it and Unblock the Notifications