கடத்தல்காரர்களைப் பிடிக்கும் வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குநர் ராஜன் லஞ்ச வழக்கில் கைது!

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் போன்றோருக்கு அடுத்து டிவியிலிலும், மீடியாக்களிலும் அடிக்கடி அடிபடும் பெயர் சி.ராஜன். இவர் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையின் சென்னை பிராந்திய கூடுதல் இயக்குநர் ஆவார்.
சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களைப் பிடிப்பதுதான் ராஜன் மற்றும் அவரது படையினரின் வேலையாகும். கப்பல்கள், விமானங்கள் மூலம் கடத்தப்படும் பொருட்களைப் பிடிப்பது இவர்களின் பணி. போதைப் பொருட்கள், ஆடம்பர நகைகள், அரிய வகை உயிரினங்கள், தங்கக் கட்டிகள் என பல வகையான பொருட்களின் கடத்தலைக் கண்காணித்து ராஜன் தலைமையிலான படையினர் பிடித்து பலரையும் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் சமீப காலமாக ராஜன் மீது சரமாரியான புகார்கள் சிபிஐக்குப் போயின. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், ராஜனை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில், சென்னையில் பிரபல செல்போன் வியாபாரியான உபயதுல்லா வெளிநாடுகளிலிருந்து ஏராளாமான செல்போன் இறக்குமதி செய்து வந்தார். மேலும், ஏற்கனவே இவர் வழக்கு ஒன்றிலும் சிக்கியுள்ளார். இதனையடுத்து, உபயதுல்லாவின் வங்கி கணக்கை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை முடக்கியது.
இந்த வங்கி கணக்கை மீண்டும் செயல்பட வைக்கக்கோரி உபயதுல்லா ராஜனை அணுகி உள்ளார். அதற்கு ராஜன் இரண்டரை லட்சம் பணமும், ஒரு ஐபேடும் தரும்படி கேட்டதாக தெரிகிறது. இதன்படி உபயதுல்லா இரண்டரை லட்சம் பணமும், ஐபேடும் எடுத்து கொண்டு ராஜனின் வீட்டுக்கு சென்று உள்ளார்.
பணத்தையும், ஐபேடையும் ராஜனின் கார் டிரைவர் முருகேசனிடம் கொடுத்து உள்ளார். நள்ளிரவில் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது.
இதை கண்காணித்த சி.பி.ஐ. அதிகாரிகள் உபயதுல்லாவை கையும் களவுமாக பிடித்தனர்.மேலும், ராஜனையும் அவருடைய கார் டிரைவரையும் கைது செய்தனர். பின்னர் இவர்கள் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ராஜனை மார்ச் 23ம் தேதி வரை சிறையில்அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ராஜன் புழல்சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜனின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து தற்போது ராஜன் மூலம் பரபரப்பு கிளம்பியுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications