குமரியில் குடிமகன்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் போலீசார்

Subscribe to Oneindia Tamil

குமரி: குமரி மாவட்டத்தில் போலீசார் சிலர் குடிமகன்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி குடித்துபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டம் கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் குடிமகன்களை மிரட்டி போலீசார் பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. மதுவாங்கி விட்டு வருபவர்களையும் போலீசார் பிடித்து நடவடிக்கை எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

களியக்காவிளை அதங்கோட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று குழித்துறையில் உள்ள மதுக்கடையில் 8 மதுபாட்டில்கள் வாங்கிவிட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு நின்ற போலீசார் அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டனர். அவர் மதுப்பாட்டில்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு தான் சென்றுள்ளார். ஆனாலும் போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+