ஹோலி ஸ்பெஷல்: இன்று முதல் பெட்ரோல் விலை உயரும்?

இப்போதைய தகவல்படி லிட்டருக்கு ரூ 4 வரை பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும் என்பதில் எண்ணெய் நிறுவனங்கள் பிடிவாதமாக உள்ளன.
விலையை உயர்த்துவதில் அரசு தயக்கம் காட்டினாலும், மேலும் தாமதித்தால் எண்ணெய் சப்ளை தடைபடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும் என்பதால், வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளும் சூழல் உள்ளதாகவும் பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இப்போதே அன்றாட செலவுகளை சமாளிக்க 6 பில்லியன் டாலர் வரை இந்தியன் ஆயில் நிறுவனம் கடன் வாங்குவதாகவும், இதற்கு மேல் உயர்த்தினால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்சேபிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை அறிவிப்பதால் உண்டாகும் நெருக்கடியும் அரசுக்கு நினைவுக்கு வராமல் இல்லை. இருந்தாலும், வழக்கமான அரசியல் ஸ்டைலில் அதைச் சமாளித்துக் கொள்ளலாம், விலையை உயர்த்துங்கள் என பச்சைக் கொடி காட்டும் மூடுக்கு அரசு வந்திருப்பதாகக் கூறுகிறார்கள் பெட்ரோலிய அமைச்சகத்தினர்.
இன்னொன்று, இந்த மாதிரி செய்திகளை அரசுத் தரப்பு அடிக்கடி கசிய விடுவதும் மறுப்பதுமாக இருந்தாலே, விரைவில் விலை கிடுகிடுவென உயரப் போகிறதென்று அர்த்தம்!












Click it and Unblock the Notifications