ஒரு பெண் எம்.எல்.ஏவைக் கூட தேர்ந்தெடுக்காத கோவா-உ.பியில்தான் ஜாஸ்தி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 55 பெண்கள் மட்டுமே சட்டசபைக்கு் தேர்வாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக உ.பியில் 33 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேசமயம், கோவா மாநிலத்தில் ஒரு பெண்ணைக் கூட அந்த மாநில மக்கள் தங்களது பிரதிநிதியாகத் தேர்வு செய்யவில்லை.

சமீபத்தில் உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பொதுத் தேர்தல் நடந்தது. ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 690 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் வெறும் 55 இடங்களுக்கு மட்டுமே பெண்கள் தேர்வாகியுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் வெறும் 8 சதவீதமே ஆகும்.

இதில் மோசமான நிலை என்னவென்றால் கோவாவில் ஒரு பெண்ணைக் கூட அந்த மாநில மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மணிப்பூரில் 3 பேரையும், உத்தரகாண்ட்டில் 5 பேரையும் தேர்வு செய்துள்ளனர். பஞ்சாபில் 14 பெண்களுக்கு எம்.எல்.ஏவாகும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உபியில்தான் அதிகபட்ச அளவாக 33 பெண்கள் சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருவது இந்த நேரத்தில் நினைவு கூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+