வருமான வரி உச்சவரம்பு ரூ 3 லட்சம் - நிலைக்குழு பரிந்துரை

முன்னாள் நிதி அமைச்சரும் பா.ஜனதா மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு, நேரடி வரி குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செயது, சபாநாயகர் மீரா குமாரிடம் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், "வருமான வரியின் உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரைக்கலாம். ரூ.3 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு முறைப்படி வரி விதிக்கப்படும்.
அதேபோல் ரூ.1 கோடியாக உள்ள சொத்து வரியை ரூ. 5 கோடியாக உயர்த்தலாம். அதற்கு மேல் உள்ள சொத்து கணக்குகளுக்கு வரி வதிக்கப்படும். மேலும் 30 சதவீதமாக இருக்கும் நிறுவன வரியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்," என கூறப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாட்டில் ரூ 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கப்படும் வருமான வரி அளவு ரூ 21,094 கோடி. இந்த வருமானப் பிரிவில் இடம்பெறுவோர் எண்ணிக்கை 2.75 கோடி.
10 - 20 லட்ச ரூபாய் வருமானம் உள்ள பிரிவினர் எண்ணிக்கை 3.35 லட்சம். இவர்கள் செலுத்தும் வரி அளவு ரூ10,185 கோடி. ரூ 20 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்ப் பிரிவில் 1.85 லட்சம் பேர் உள்ளனர். இவர்களின் வருமானம் ரூ 53,170 கோடி.












Click it and Unblock the Notifications