கேரள மார்க்சிஸ்ட் கட்சியில் மோதல்: எம்.எல்.ஏ. செல்வராஜ் ராஜினாமா
திருவனந்தபுரம்: கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. செல்வராஜ் தமது பதவியை ராஜினாமா செய்ததால் மாநில சட்டப்பேரவையில் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியின் பலம் 67 ஆகக் குறைந்துவிட்டது.
140 தொகுதிகளை கொண்ட கேரளாவில், 72 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இதில் அமைச்சர் டி.எம்.ஜேக்கப் இறந்து விட்டதால், தற்போது பேரவையில் ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் பலம் 71 ஆக குறைந்து விட்டது.
இதுபோல எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் இடதுசாரி ஜனநாயக கூட்டணியின் பலம் 68 ஆக இருந்தது. இதில் நேற்று ஆர்.செல்வராஜ் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியில் இருந்து விலகினார். அவர் தனது விலகல் கடிதத்தை, சபாநாயகரிடம் கொடுத்தார். இதனால் எதிர்க்கட்சி வரிசையின் பலம் 67 ஆக குறைந்தது.
நெய்யாற்றின் கரை தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்த செல்வராஜ், மாவட்ட கமிட்டியில் இருந்தும் விலகினார்.
தாம் பதவி விலகியது குறித்து கருத்து தெரிவித்த செல்வராஜ், கட்சியில் எனக்கு உரிய மரியாதை இல்லை. எனக்கு எதிரான நடவடிக்கைக்கு மாநில தலைவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இருப்ப்னும் மார்க்சிஸ்ட் கட்சியின் சாதாரண தொண்டராக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றார்.
எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய செல்வராஜின் வீடு நெய்யாற்றங்கரையில் இருக்கிறது. அந்த வீட்டின் மீது சிலர் கல்வீசி தாக்கினார்கள்.












Click it and Unblock the Notifications