இல.கணேசனுக்கு இடையூறாகப் பிரசாரம் செய்த குஷ்பு மீது போலீஸார் வழக்கு!

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் இல.கணேசன். மனதில் பட்டதை நேர்மையாகப் பேசக் கூடியவர். தெள்ளத் தெளிவாக பேசக் கூடிய ஒரு முக்கியத் தலைவர். இவர், சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் முருகனை ஆதரித்து சங்கரன்கோவில் நகர பகுதியில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.
சங்கரன்கோவில் தேரடி திடல், தெற்கு ரத வீதி சந்திப்பு பகுதியில் அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். முறைபப்டி அனுமதி வாங்கியே இந்தப் பிரசாரம் நடந்தது. ஆனால் அப்போது தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகை குஷ்பு இல.கணேசன் பேசிக் கொண்டிருந்த பகுதிக்கு வந்து பேசத் தொடங்கினார்.
கணேசனா, குஷ்புவா என்று வந்தபோது குஷ்பு பக்கமே கூட்டம் சாய்ந்தது. இதனால் பாஜகவினரின் பிரசாரத்திற்கு ஊறு ஏற்பட்டது. இல.கணேசன், எந்தப் பிரச்சினையும் செய்யாமல், கெளரவமாக ஒதுங்கிக் கொண்டார். அதாவது தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். இது பாஜகவினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. ஆனால் நாகரீகம் பார்க்காமல், தொடர்ந்து தன் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தார் குஷ்பு.
இத்தனைக்கும் அந்த இடத்தில் பிரசாரம் செய்ய குஷ்பு அனுமதியே வாங்கியிருக்கவில்லை. வேறு இடத்தில் பேச அனுமதி வாங்கி விட்டு இங்கு வந்து குழப்பம் ஏற்படுத்தி விட்டு போய் விட்டார்.
இதையடுத்து தற்போது அனுமதி வாங்காமல் பேசியதாக குஷ்பு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, அரசியலில் இன்னும் பக்குவம், நாகரீகம் வர வேண்டும் குஷ்புவுக்கு என்று பாஜகவினர் குமுறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications