விமானிகளின் போராட்டத்தால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்க்கு மீண்டும் சிக்கல் -40 விமான சேவைகள் ரதது

Subscribe to Oneindia Tamil

Kingfisher
டெல்லி/மும்பை: நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இப்போது விமானிகளின் வடிவத்தில் சோதனை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை அளிக்கக் கோரி விடுப்பு போராட்டத்தை விமானிகள் மேற்கொண்டு வருவதால் 40-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்ப்ட்டுள்ளது.

மும்பையிலிருந்து இயக்கப்பட வேண்டிய 11 விமானசேவைகளை கிங்பிஷர்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கிங்பிஷர்ஸ் நிறுவனம், ஊதிய விவகாரம் தொடர்பான ஊழியர்களின் போராட்டத்தால் தமது சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

"திட்டமிட்டபடியான 80 சதவீத சேவைகளை நாங்கள் இயக்கிவருகிறோம். விரைவில் முழு அளவிலான விமான சேவையை தொடருவோம்": என்றும் கிங்பிஷர்ஸ் நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து, விமான சேவைகளை ரத்து செய்திருந்தது.

அண்மையில்தான் எரிபொருள் வழங்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் விமான சேவையை தொடங்கியிருந்தது. இந்நிலையில் ஊதியத்தை வழங்கக் கோரி போராட்டம் நடத்தும் விமானிகள் தங்களது எதிர்ப்பின் அடையாளமாக "உடல்நலக்குறைவு விடுப்பு" முறையை கடைபிடித்து வருகின்றனர். இதனால் மீண்டும் கிங்பிஷர் நிறுவனம் தவிக்கத் தொடங்கியிருக்கிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+