ஜெகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஆந்திர அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
டெல்லி: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் மீதான வருமானத்துக்கும் அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் 6 ஆந்திர மாநில அமைச்சர்கள், 8 ஆந்திர ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெகன் சொத்து சேர்த்ததற்கு உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுதாகரர் ரெட்டி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த நோட்டீஸை அனுப்பியது.
உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள அனைவரும் மறைந்த ராஜசேகர் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் பொறுப்பு வகித்தவர்கள். வருமானத்துக்கும் அதிகமாக சட்டவிரோதமாக ஜெகன் மோகன் ரெட்டி சொத்துகுவிக்க இவர்கள் உடந்தையாக இருந்தனர் என்பது குற்றச்சாட்டு, இருப்பினும் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள் அமைச்சர்கள், ஜெகனின் ஆதரவாளர்கள் இல்லை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கிரண் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்த ஆறு அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications