பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பாக யாரும் தொடர்புகொள்ளவில்லை: முலாயம்சிங்
டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை அமைத்துள்ள சமாஜ்வாதி கட்சி இப்போது தேசிய அரசியலில் தம்மை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது.
உத்தரப்பிரதேச முதல்வராக தம்மை தேர்வு செய்த தந்தை முலாமய்ம்சிங் யாதவ் தேசிய அரசியலில் தீவிரம் காட்டுவார் என்று ஏற்கெனவே அகிலேஷ்யாதவ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 2014-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் முலாயம்சிங், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்றும் மூன்றாவது அணியை முலாயம்சிங் உருவாக்கக் கூடும் என்றும் பல்வேறு யூகங்கள் உலவி வருகின்றன.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த முலாயம்சிங், பிரதமர் வேட்பாளரை தம்மை முன்னிறுத்துவது குறித்து இதுவரை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்றார் அவர்.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் 3-வது அணி அமைப்பது பற்றி மழுப்பலான பதிலையே முலாயம் கூறியுள்ளார்.
"மூன்றாவது அணி பற்றி ஊடகங்களில்தான் படித்து வருகிறேன். அப்படியான ஒரு முயற்சி நடப்பதாக தெரியவில்லை. யாரும் என்னை தொடர்புகொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.
மக்களவை உறுப்பினராக உள்ள முலாயம்சிங் யாதவ், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications