Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடைத்தேர்தல்: சங்கரன்கோவிலில் இதுவரை ரூ.63 லட்சம் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.63 லட்சம் ரொக்கமும், ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் பறி்முதல் செய்யப்பட்டுள்ளன.

சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு தாசில்தார் கோமதிசங்கர நாராயணன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அதில் இருந்து சங்கரன்கோவில் எழில்நகரைச் சேர்ந்த பிச்சையா மகன் ஞானசம்பந்தன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 255 ரொக்கம் பறி்முதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவர் மீது சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று அதிகாலை நடுவப்பட்டி சோதனைச்சாவடியில் விளாத்திகுளம் துணை தாசில்தார் சேதுராமன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக காரில் வந்த நாகப்பட்டினம் மாவட்டம் விடிமங்களத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மோகன் காந்தி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.34,000 பறி்முதல் செய்யப்பட்டது.

சங்கரன்கோவி்ல் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.62 லட்சத்து 83 ஆயிரத்து 205 ரொக்கமும், 7 லட்சத்து 62 ஆயிரத்து 659 மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+