அவ்வளவு கூறியும் கேட்காத காங்கிரஸ் உறவை திமுக மறுபரிசீலிக்க வேண்டும்: வீரமணி

Subscribe to Oneindia Tamil

Veeramani
சென்னை: அவ்வளவு கூறியும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருப்பது பற்றி திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

போர்க் குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை ராஜபக்சே அரசினைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் பல முறை வற்புறுத்தியுள்ளார். அதோடு அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் வற்புறுத்தியுள்ளனர்.

இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக, அதிமுக, இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன.

இந்நிலையில் இன்னமும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு ‘‘வெண்டைக்காய், விளக்கெண்ணெய், கத்தாழை கலந்ததாக’’ இருப்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது.

திமுக தலைவர் எவ்வளவோ வேண்டுகோள் மேல் வேண்டுகோள் விடுத்த பிறகும் மேலும் பிடிவாதம் காட்டினால், திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடருவதுபற்றி தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+