ரயில்வே பட்ஜெட் பரபரப்பில் இலங்கை விவகாரத்தை ஊத்தி மூட முயன்ற மத்திய அரசு!
டெல்லி: ரயில்வே பட்ஜெட் பரபரப்புக்கு மத்தியில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் குறித்த விவகாரத்தை ஊத்தி மூடி விட்டது மத்திய அரசும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும்.
மிகவும் சென்சிட்டிவான இந்தப் பிரச்சினையை படு சாதாரண ஒன்றாக கருதி அதை மதிப்பில்லாமல் போகச் செய்து விட்டனர் மத்திய வெளியுறவு அமைச்சரும், மத்திய அரசும்.
இந்தப் பிரச்சினை குறித்து நேற்று நாள் முழுவதும் ராஜ்யசபாவில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பியபோதும் அதுகுறித்து அவையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் ஒரு வார்த்தை கூட பேசாமல் கம்மென்று இருந்தார்.
அவர் நினைத்திருந்தால் இதுகுறித்துப் பேசியிருக்கலாம். வெளியுறவுத்துறை அமைச்சர் வந்துதான் பதிலளிக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரே ஏதாவது கருத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் எதையுமே அவர் பேசவில்லை. மாறாக மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பதிலளிப்பார் என்று அவையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பிரச்சினையால் நேற்று நாள் முழுவதும் அவைக் கூட்டத்தை தமிழக எம்.பிக்கள் நடத்த விடாமல் முடக்கி விட்டனர். இந்த நிலையில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சமயம் பார்த்து கிருஷ்ணாவை விட்டு ஒரு அறிக்கை வாசிக்கச் செய்துள்ளது மத்திய அரசு.
இது உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. காரணம், ரயில்வே பட்ஜெட் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை விவகாரத்தை புகுத்தி அதை ஒன்றுமில்லாமல் ஊத்தி மூடச் செய்யும் உத்தியே இது என்று கருதப்படுகிறது. அதன்படியே ரயில்வே பட்ஜெட்டுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் இன்று நடந்த சிறிய அளவிலான விவாதம் முடங்கிப் போய் விட்டது.
இதேபோல நாளை மறு நாள் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரம் பார்த்து இலங்கை விவகாரம் தொடர்பாக மேலும் சில முக்கிய முடிவுகளை அறிவித்து இந்த விவகாரத்தை மறுபடியும் மூடி மறைக்க மத்திய அரசு முயலலாம் என்று கருதப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பது குறித்து தனது இன்றைய விளக்கத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு வார்த்தை கூட தெரிவிக்காமல் உட்கார்ந்து விட்டார் என்பது தமிழக அரசியல் கட்சிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அடுத்து அவர்கள் ராஜ்யசபாவில் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications