திராணியை நிரூபிக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் களம்: பிரச்சாரம் நாளை ஓய்வு

சங்கரன்கோவில் தொகுதிக்கு மார்ச் 18ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ந் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடந்தது. தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவகர் சூரிய குமார், அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி, மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமார், தேமுதிக வேட்பாளர் முத்துகுமார், பாஜக வேட்பாளர் முருகன், சமாஜ்வாடி வேட்பாளர் நாகேஸ்வர ராவ், அகில இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் கணேசன் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்கு பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் மார்ச் 16ந் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையொட்டி மதுபானக் கடைகளுக்கும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இறுதிகட்ட பிரசாரத்தில் தலைவர்கள் முகாமிட்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று சங்கரன்கோவில் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று சங்கரன்கோவிலில் நடக்கும் பொது கூட்டத்தில் பேசுகிறார்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 5 கம்பெனி துணை ராணுவமும், 2 ஆயிரம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு வாக்கு பதிவு விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு இயந்திரங்களில் நேற்று வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டன. மார்ச் 21க்குள் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications