'பிரணாப் பட்ஜெட் ஆஹா ஓஹோ' - மன்மோகன் சிங் பாராட்டு

நாட்டின் 81 வது பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்தார். பலவித ஏமாற்றங்கள், அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பு, உச்சகட்ட தனியார்மயமாக்கல் என மன்மோகன் சிங்கின் மனமறிந்து போடப்பட்ட பட்ஜெட்டாக இது அமைந்ததால், அவரும் தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், "இந்த பட்ஜெட் மிக முக்கியமான ஒன்று. நெருக்கடியான காலகட்டத்தில் போடப்பட்டிருக்கும் மிக சிறப்பான பட்ஜெட் எனலாம்.
நாட்டின் விரைந்த, அதே நேரம் நிலையான வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் வவிகோலும்.
இன்றைய சூழலில் பொருளாதார வளர்ச்சியை ஒரே சீராக தக்க வைப்பது பெரும் சவாலாக உள்ளது. அந்த சவாலை சமாளிக்கும் வழிமுறைகளை இந்த பட்ஜெட் கூறுவதாக உள்ளது.
மானியங்கள் இன்னொரு சவால். கடந்த ஆண்டு ரூ 1,34,209 ஆக மானியங்களைக் குறைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது ரூ 1,79,554 ஆக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு ரூ 2,08,502 ஆக உயரும் அபாயம் உள்ளது. எனவே நேரம் பார்த்து மானியங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications