For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்னிந்தியாவில் செய்வினை செய்கிறாரம் ப.சி: 'ட்விட்டரில்' அடித்துவிடும் சு.சாமி'!

By Siva
Google Oneindia Tamil News

Chidambaram and Swamy
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினை செய்து வருவதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பற்றி இஷ்டத்துக்கும் எதையாவது எழுதுவதே வேலை எனும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிதம்பரம் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார் என்று தெரியுமா என்று ட்விட்டரில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் அதற்கு ஒரு ஆதாரமும் தரவில்லை. இப்போது சிதம்பரம் பற்றி ட்விட்டரில் மீண்டும் ஒரு புரளியைக் கிளப்பியுள்ளார்.

இன்று காலை ட்விட்டரில் சுப்பிரணியன் சுவாமி கூறுகையில், "ப.சிதம்பரத்தின் செலவுப் பட்டியிலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது எது தெரியுமா? தென்னிந்தியாவில் அவர் அதிகளவில் செய்வினைகள் செய்து வருகிறார். செய்வினை செய்தவருக்கே திரும்பும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கெல்லாம் எந்த ஆதாரத்தையும் அவர் தரவில்லை.

ஏற்கெனவே காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிரான்ஸில் ஆப்கானிஸ்தான் நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் இருந்ததாக ட்விட்டரில் சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் அவர் ஆதாரம் தரவில்லை.

English summary
Janata Party leader, Subramanian Swamy, India's own 'WikiLeaks' flung another Twitter bomb at Home Minister P Chidambaram on Sunday. "What PC's second biggest item of expenditure? On holding black magic pujas in South India. Black magic always boomerangs," read his tweet dated Mar 18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X