என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மேலும் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டது
சென்னை: சென்னை வேளச்சேரியில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வடமநைலத்தவரில் மேலும் ஒருவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட ஒரே ஒரு உடல் அரசு பொதுமருத்துவமனையில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 23-ந்தேதி வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதில் கொள்ளை கும்பல் தலைவன் அஜய்குமார் அவனது கூட்டாளிகள் 2 பேர் உடல்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு பீகாரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சென்னை வந்து உடல்களை பெற்றுச் சென்றனர்.
இதில் அடையாளம் காணப்படாத மேலும் 2 கொள்ளையர்களின் உடல்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு கொள்ளையனின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பீகார், மாநிலம் நாளந்தா பகுதியை சேர்ந்த ஜே.பி. யாதவ் என தெரிய வந்துள்ளது. இவன் மீது பீகார், மும்பையில் பல்வேறு வங்கி கொள்ளை வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது. அண்மையில்தான் சிறையிலிருந்து இவன் விடுதலையானவன் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வழக்கு விபரங்களை எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே சென்னையில் இருந்து ஒரு தனிப்படையினர் பீகாரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அடையாளம் காணப்பட்ட யாதவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உடலை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இன்னும் ஒரு கொள்ளையனின் உடல் மட்டும் அடையாளம் காணப்படாமல் அரசு பொது மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications