திமுக ஒன்றிய செயலாளர் கடத்தல்: கடலோர கிராமங்களில் எம்.பி. ரித்தீஷுக்கு வலை

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய திமுக செயலாளர் கதிரவன் கட்டத்தப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் எம்.பி. ரித்தீஷ் உள்பட 14 பேர் மீது மதுரை சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் வழக்கப் பதிவு செய்தார்.
இதையடுத்து தெய்வீகபாண்டியன் மற்றும் மதுரை திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரித்தீஷ் உள்ளிட்டோரை விசாரணைக்காக தேடி வருகின்றனர். மற்றொரு தனிப்படை ரித்தீஷை தேடி கேரளாவுக்கு சென்றது. ஆனால் போலீஸ் என்கவுண்டரில் கேரளாவைச் சேர்ந்த சினோஜி சுட்டுக் கொல்லப்பட்டதால் அவர் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு நெருக்கமானவர்களும், ஆதரவாளர்களும் அதிகம் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் அவர் இருக்கலாம் என்று போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக ராமநாதபுரத்தில் தங்கி கடலோர கிராமங்களில் அவரை தேடி வருகின்றனர். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதனால் துண்டு சீட்டுகள் மூலம் தகவல் பரிமாற்றம் நடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ரித்தீஷுக்கு நெருக்கமானவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications