For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோடு அருகே தண்ணீர் தேடி வந்த மான் நீரில் மூழ்கி பலி

By Siva
Google Oneindia Tamil News

Deer
ஈரோடு: ஈரோடு அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது சேர்வராயன் என்னும் கிராமம். அந்தியூர் வனப்பகுதியில் இருந்து 5 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் அந்த கிராமத்திற்கு தண்ணீர் தேடி வந்தது. அது அங்குள்ள முருகன் கோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த அந்த கிரமாத்து இளைஞர்கள் சிலர் மானைக் காப்பாற்ற கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். ஆனால் அதற்குள் அது நீரில் மூழ்கி இறந்தது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ஈரோடு மாவட்ட வன அதிகாரி ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மானின் உடலை கைப்பற்றினார். பின்னர் அந்த இடத்திலேயே அதை கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார்.

அழகான புள்ளிமான் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
A deer got downed in a well near Erode after it entered the village in search of water. Forest department officer recovered the body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X