மெக்சிகோவில் மிக பயங்கர நிலநடுக்கம்: 7.4 ரிக்டெர் பதிவு-500 வீடுகள் சேதம்

Subscribe to Oneindia Tamil

மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் செவ்வாய்கிழமை மாலை ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தினால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்த இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளது.

மிகக் கடுமையான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

மெக்ஸிகோவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவெரெரோ மாநிலத்தின் ஒஸாகா (oaxaca mexico) எனும் இடத்திற்கு அருகே இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 17.5 கிலோமீட்டர் ஆழத்தில் இது இருந்ததாக புவியியல் வல்லுநர்களின் கணக்கெடுப்பு கூறியுள்ளது.

சுமார் ஒருநிமிடம் நீடித்த இந்நிலநடுக்கத்தினால் 500 க்கு மேற்பட்ட வீடுகள் தேசமடைந்துள்ளன. தகவல் தொடர்பு, மின்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு சற்று முன்னதாக குவாதமாலா நகரிலும் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் குவெரெரோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களால் நன்கு உணரப்பட்டதுடன் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறி தெருக்களுக்கு ஓடிவந்தனர்.

பசுபிக் கடற்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான அகாபுல்கோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டு வந்தாலும் 1985 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கம் குறித்து கருத்து கூறியுள்ள ஜனாதிபதி ஃப்லிப்பி கால்டரன் நிலநடுக்க சேதம் குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து உணர்ந்துள்ளதாகவும் அதை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+