மின்சாரம், குடிநீர், தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.6.27 கோடி பாக்கி வைத்துள்ள எம்பிக்கள்

Subscribe to Oneindia Tamil

Electricity Dues
டெல்லி: எம்.பி.க்கள் மின்சாரம், குடிநீர், தொலைபேசி ஆகியவற்றிற்கான கட்டணத்தை செலுத்தாமல் டெல்லி மாநகராட்சிக்கு சுமார் ரூ.6.27 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.க்கள் பயன்படுத்திய மின்சாரம், குடிநீர், தொலைபேசி ஆகியவற்றிற்கு செலுத்தப்படாமல் உள்ள கட்டண பாக்கி எவ்வளவு என்பது குறித்து சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அறிய விண்ணப்பத்திருந்தார். இதற்கு டெல்லி மாநகராட்சி அளித்த பதிலில், மொத்தம் ரூ.6 கோடியே 27 லட்சம் கட்டண பாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர்களான சரண்சிங், பி.வி.நரசிம்மராவ், தேவேகவுடா, முன்னாள் துணை பிரதமர் அத்வானி, முன்னாள் அமைச்சர்கள் ராஜேஷ் பைலட், சுனித் தத், ஜானேஷ்வர் மிஸ்ரா, சத்ருகன் மிஸ்ரா, சவுத்ரி, சுப்பிரமணியன் சாமி ஆகியோர் கட்டண பாக்கி வைத்துள்ளதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது

மொத்தம் 3,335 மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண பில்கள் செலுத்தப்படாமல் உள்ளது. இதில் முன்னாள் எம்.பி. கனிகான் சவுத்ரி அதிகபட்சமாக ரூ.42 லட்சம் கட்டண பாக்கி வைத்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த 2008ம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, கட்டண பாக்கி வைத்துள்ள எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் இருந்து அதனை வசூலித்து கொள்ளலாம் என்று லோக்சபா செயலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எம்.பி.க்கள் மீதம் வைத்துள்ள கட்டண பாக்கி தொகை அதிகம் என்பதால், அவர்களின் சம்பளத்தில் இருந்து மொத்த தொகையையும் கழித்துக் கொள்ள நீண்ட காலமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+