மலைப் பிரதேசங்களில் சீனா ஊடுருவல்: பிரதமருக்கு இமாச்சல் முதல்வர் கடிதம்
ஷிம்லா: இந்தியாவுக்குள் அத்துமீறி வரும் சீனாவின் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை தேவை என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் பிரேம்குமார் துமல் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சீன- இந்திய எல்லை மலைப் பிரதேசங்களில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் ரயில்வே போக்குவரத்து வசதியை சீனாஏற்ப்படுத்தி வருகிறது. பதான்கோட்- ஜோகிந்தர் நகர் பகுதியில் உலக தரம் வாய்ந்த விமான தளம் அமைப்பது இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
மேலும் சீன விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டி ஊடுருவி வருகின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவத்தை சீனா குவித்திருக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகளை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற்க்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications