கணினி மயமாகும் கிராம நிர்வாக அலுவலகங்கள் – ஜெ. நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

Free Laptops to VAOs
சென்னை: கிராம நிர்வாகத்தை கணினி மயமாக்கும் வகையில் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார். இதன் மூலம் அரசு அமல்படுத்தும் திட்டங்கள் எளிதில் மக்களை சென்றடையும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...

சென்னை தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாகம் வரை கணினி மூலம் இணைக்கும் இ கவர்னஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதாவின் கனவாகும். இதன் முதற்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பணிகளை விரைந்து முடித்திட ஏதுவாக, கடந்த 14.11.2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதிய மடிக்கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் கணினிப் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனடிப்படையில், 22 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் மடிக்கணினி, பிரிண்டர் மற்றும் கணினிப் பயிற்சி கையேடு வழங்கும் திட்டத்தினை வியாழக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஏழு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 7,787 கிராம நிர்வாக அலுவலர்கள் பயனடைவார்கள்.

விஏஒ பணி நியமன ஆணை

இதேபோல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 3,318 கிராம நிர்வாக

அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஏழு நபர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பணிநியமன ஆணைகளை 27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள்.

மடிக்கணினி, பிரிண்டர் மற்றும் கணினிப் பயிற்சி கையேடுகளை வழங்கியதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+