ஏர் இந்தியாவின் நிதி சீரமைப்புத் திட்டத்துக்கு வங்கிகள் ஒப்புதல்

ஆனால் ஏர் இந்தியாவில் கூடுதல் நிதியை முதலீடு செய்வதற்காக மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. அமைச்சரவையின் ஒப்புதல் அடுத்த வாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஏர் இந்தியா அதிகாரிகள், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிதி சீரமைப்புத் திட்டத்தின் கீழ், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளிடம் 4 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது ஏர் இந்தியா. முதன்மை மறுசீரப்பு ஒப்பந்தம், நடைமுறை முதலீட்டு வசதி ஒப்பந்தம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இதனை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும். அதன் பின்னர் ஏர் இந்தியாவுக்கு நிதி வரும். டெல்லியில் நடைபெற்ற வங்கிகளுடனான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில், மொத்தம் 19 வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் ரூ.10,500 கோடி நடைமுறை முதலீடாக அளிக்கப்படுவது மிக முக்கியமான அம்சம். நீண்ட காலக் கடனான இத்தொகைக்கு ஆண்டுக்கு 11 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாற்றத்தக்க வகையில் அல்லாத அரசுக் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.7,400 கோடி நிதி திரட்டப்படவுள்ளது. இவை தவிர ரூ.3,500 கோடி ரொக்கக் கடன் ஒப்பந்தத்தின் மூலம் திரட்டப்படும்.
ரூ 67,520 கோடி கடன்
ஏர் இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடன், பல்வேறு பாக்கித் தொகை ரூ.67,520 கோடி. இதில் ரூ.22 ஆயிரம் கோடி நீண்ட காலக் கடன். கடந்த டிசம்பர் மாதம் வரையில் மொத்தம் ரூ.21,714 கோடி குறுகிய காலக் கடனாக உள்ளது. இதற்கான வட்டியாக ஆண்டுக்கு ரூ.2,600 கோடி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் முதலே, நிதி சீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி நிதி ஆலோசகர்களை நியமித்தது. நஷ்டத்தில் உள்ள ஏர் இந்தியாவை மீண்டும் நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் சீரமைப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications