தூத்துக்குடியில் 12 மணிநேரம் வாட்டும் மின்வெட்டால் இன்வெர்ட்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு
தூத்துக்குடி: கடும் மின்வெட்டு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்வெர்ட்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மின்தடை 12 மணி நேரத்தையும் தாண்டியுள்ளது. இதனால் முதலில் அங்கொன்றும், இங்கொன்றுமாக விற்பனையாகி வந்த இன்வெர்ட்டர் தற்போது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அத்தியவாசியப் பொருளாக மாறியுள்ளது.
ரூ.7,000 முதல் 50,000 வரையில் கிடைக்கும் இந்த இன்வெர்ட்டர்களை வாங்க தற்போது பொதுமக்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. விற்பனை பிரதிநிதிகள், சர்வீஸ்மேன்கள், டெலிவரி பாய்ஸ் என பல வழிகளில் இதில் வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது இன்வெர்ட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்வெர்ட்டர்கள் வாங்க முன்பதிவு செய்துவிட்டு 1 வாரம் முதல் 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. பல முன்னணி நிறுவனங்களின் இன்வெர்ட்டர்களுக்கு 1 மாதத்திற்கு முன்னர் புக் செய்தால் தான் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த தட்டுப்பாட்டால் இன்வெர்ட்டர் விலை சற்றே உயர்ந்தும் வருகிறது. இன்வெர்ட்டர்களுடன் இணைந்து வரும் பேட்டரிகளுக்கும் தட்டுப்பாடாக உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications