For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுக்கோட்டை முத்துக்குமரனுக்கு சட்டசபையில் புகழாரம்

Google Oneindia Tamil News

Muthukumaran
சென்னை: சாலை விபத்தில் மரணமடைந்த புதுக்கோட்டை சட்டசபை உறுப்பினர் முத்துக்குமரன் மறைவுக்கு இன்று சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மெளன அஞ்சலி செலுத்தி அவை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் நேற்று புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் முத்துக்குமரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்ப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு சபை கூடியது. திருக்குறள் வாசித்த பின்னர் சபாநாயகர் ஜெயக்குமார் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். பின்னர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

English summary
Tamil Nadu assembly will be adjourned today after paying homage to Pudukottai CPI MLA Muthukumaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X