நீலகிரி அருகே இளம் பெண்ணை சீரழித்தவர் கைது: பேரவையில் ஜெயலலிதா தகவல்
நீலகிரி: நீலகிரியை அடுத்த பந்தலூர் கிராமத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
புகார் என்ன?
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 30ம் தேதி நிதி நிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்தின் போது பந்தலூரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி திமுக உறுப்பினர் திராவிட மணி புகார் எழுப்பியிருந்தார்.
இந்தப் புகாருக்கு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று பதில் அளித்து பேசியதாவது,
நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பந்தலூர் கிராமத்தில் 17 வயது பெண் ஒருவர் 14.3.2012 அன்று வீட்டில் தனியாக இருந்த போது, ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீகாந்த் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தமது தந்தை சக்திவேலிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வசந்தன் என்பவருடன் சென்ற சக்திவேல் ஸ்ரீகாந்துடன் தகராறு செய்துள்ளார். இதில் பிரபு என்பவர் தாக்கப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீகாந்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரபு தாக்கப்பட்டது குறித்தும் அளித்த புகாரின் பேரில் சக்திவேல், வசந்தன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications