சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: செலவு கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப். 20
நெல்லை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வரும் 20ம் தேதிக்குள் தங்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜக உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் தேர்தலுக்கு முன்பாக கடந்த மாதம் 6, 10, 15 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக செலவு கணக்கை தாக்கல் செய்தனர். சட்டசபை தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,
செலவு கணக்கை தாக்கல் செய்ய வரும் 20ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நோ்ட்டீஸ் அனுப்பப்படும் என்றனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications